ஐ ஹேட் யூ பட் – 25

Tamil New Sex Stories – “என் தம்பிதான் அந்த பொண்ணோட ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணினான் அசோக்..!!”

“அப்படியா..??”

“ஆமாம்.. அவனுக்கு இவ காலேஜ் சீனியராம்..!!”

“ஓஹோ..?? இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே.. சரி.. நான் அவகிட்ட கேக்குறேன்..!!”

“ஹ்ம்ம்.. அடுத்த மாசம் ஜாயின் பண்றால..??”

“இல்ல.. கொஞ்சம் எர்லியராவே ஜாயின் பண்ணிடுவா போல இருக்கு.. அவங்க கம்பனில சீக்கிரமே ரிலீவ் பண்றாங்களாம்.. காலைல பேசுறப்போ சொன்னா..!!”

“ஓ..!!”

மனதில் ஏதோ ஒரு உறுத்தல் எழ, ப்ரியா அமைதியாகிப் போனாள். கை கழுவிட்டு வெளியே வந்தார்கள். அவர்களுடைய தளத்துக்கு செல்ல, அனைவரும் லிஃப்ட் நோக்கி நடையை போட்டபோது, உள்ளுக்குள் இருந்த அந்த குறுகுறுப்பை அடக்க முடியாமல், அசோக்கிடம் மெல்லிய குரலில் கேட்டாள்.

“சொ..சொந்தக்கார பொண்ணுனா.. உனக்கு என்ன முறை வேணும் அசோக்..??”

“ஏன் கேக்குற..??’

“சு..சும்மாதான்.. தெரிஞ்சுக்கலாமேன்னு..!!”

“எனக்கு அக்கா பொண்ணு.. மாமா மாமான்னுதான் கூப்பிடுவா.. அவ அக்காவைத்தான் என் அண்ணனுக்கு முடிச்சிருக்கோம்..!!”

“ஓ..!!!!!”

ப்ரியாவுக்கு மனதில் இருந்த உறுத்தல் இப்போது இன்னும் பெரிதானது. செண்பகத்தின் மீது ஒரு இனம்புரியாத பொறாமை அவளுடைய உள்ளத்தில் உருவானது. ‘அந்த செண்பகத்துக்கு பதிலாக நான் இவனுடைய முறைப்பெண்ணாக இருந்திருக்க கூடாதா..?’ என்று ஏக்கம் வந்தது. ‘மாமா மாமா என்று இவனை கொஞ்சி கொஞ்சி கூப்பிடலாமே..?’ என்று ஆசை எழுந்தது. அந்த ஆசையுடனும் ஏக்கத்துடனுமே அசோக்கை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தாள்.

அத்தியாயம் 15

எல்லோரும் லிஃப்ட் ஏறி அவர்களுடைய தளத்திற்கு சென்று, அன்றைய வேலையை கவனிக்க ஆரம்பித்தார்கள். நேத்ரா அன்று முழுக்க அசோக்கைப்போட்டு அரித்தெடுத்தாள். பாட்டுப்போட்டியில் கலந்து கொள்வதாக முடிவு செய்திருந்தாள் அல்லவா..?? அது விஷயமாகத்தான்..!! அசோக்கிற்கு அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை வந்த தமிழ் திரை இசை பாடல்கள் எல்லாம் அத்துபடி..!! அவள் இவனை அணுகியதற்கு அதுதான் காரணம்..!!

“ஹேய்.. ‘கண்டுகொண்டைன் கண்டுகொண்டைன்’னல்லி ஒந்து ஸாங்கு இதியல்லா..?? சித்ரா ஸோலோ ஸாங்கு..!!” என்று ‘கண்ணாமூச்சி ஏனடா..?’ பாடலை கேட்டாள்.

“ஆமாம்.. இருக்கு..!!”

“ஆ சாங்கு MP3 நன்க் பேக்கு..!!”

“அது எதுக்கு உனக்கு..??”

“காம்படிஷன்கே ப்ராக்டிஸ் மாட் பேக்கு..!!”

“தமிழ் சாங்கா பாடப்போற..?? உனக்குத்தான் தமிழ் புடிக்காதுல..??”

“ஹூ டோல்ட்..?? ஐ லைக் டமில் வெரி மச்..!!”

என்று இதழில் புன்னகையும், முகத்தில் மலர்ச்சியுமாய் சொன்ன நேத்ராவை அசோக் வித்தியாசமாக பார்த்தான். அப்புறம் அந்த பாடலின் MP3 தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து அவளுடைய மொபைலுக்கு ப்ளூடூத் மூலம் ட்ரான்ஸ்ஃபர் செய்தான்.

“ஹேய்.. அந்த சாங் லிரிக்ஸ்.. இங்க்லீஷ் ஃபான்ட்ல வேணும்..!!” கேட்டாள் நேத்ரா. அனுப்பி வைத்தான் அசோக்.

“ஹேய்.. ஐ வான்ட் டு நோ த மீனிங்ஸ் ஆப் தீஸ் வேர்ட்ஸ்..!!” கேட்டாள் நேத்ரா. அனுப்பி வைத்தான் அசோக்.

“உதடுகள்னா எனக்கு தெரியும்.. ஈரமாய் வாழ்கன்னா.. என்ன மீனிங்..??” நேத்ரா புரியாமல் கேட்க, அசோக் அவஸ்தையாய் நெளிந்தான்.

“ஹையோ.. ஏண்டி இப்டி தமிழ்ப்பாட்டை சூஸ் பண்ணி.. என் உசுரை வாங்குற..??”

“ஹேய்.. சொல்லு..!! மீனிங் தெரிஞ்சாத்தான் ஒரு ஃபீலோட பாட முடியும்..!!”

நேத்ரா விடாப்பிடியாக இருக்க, வேறு வழியில்லாமல் அசோக் வெட்கத்துடனே அந்த வரிகளுக்கு விளக்கம் கொடுத்தான். அசோக்தான் அவ்வாறு அவஸ்தைப்பாட்டானே ஒழிய, அவன் சொன்ன விளக்கத்தை கண்களில் மின்னலும் உதட்டில் புன்னகையுமாய் நேத்ரா கேட்டுக்கொண்டாள். திடீரென..

“ஐ மிஸ் யூன்றதை தமிழ்ல எப்படி சொல்றது அசோக்..??” என்று அவள் ஆர்வமாய் கேட்க அசோக் நெற்றியை சுருக்கினான்.

“ஏன் கேக்குற..??”

“ஹேய்.. சொல்லேன்.. ப்ளீஸ்..!!”

“தெ..தெரியல.. நான் உன்னை மிஸ் பண்றேன்னு சொல்லு.. புரிஞ்சுப்பாங்க..!!”

என்று எரிச்சலாக சொன்னான். சொல்லிவிட்டு நேத்ராவை ஏறிட்டு வியப்பாய் ஒரு பார்வை பார்த்தான். ‘என்னாச்சு இவளுக்கு..??’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

ஆனுவல் டே வந்தது..!!! அவர்களுடைய ஆபீசே விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது..!! கம்பனி வளாகத்திற்குள் எங்கு பார்த்தாலும்.. கலர்கலராய் பலூன்களும்.. காகிதப்பூ தோரணங்களும் தொங்கின..!! ஆங்காங்கே விழா பற்றிய அறிவிப்பு போஸ்டர்கள் ஜிகினா பூச்சோடு மின்னின..!! ராட்சச வடிவ ஸ்பீக்கர்களில் ‘தேரி மேரி.. மேரி தேரி.. ப்ரேம் கஹானி ஹே முஷ்கில்..’ என ஷ்ரேயா கோஷல் உச்சஸ்தாயில் உருகிக்கொண்டிருந்தார்..!! கம்பனிக்குள் எதிர்ப்படுகிற முகங்களில் எல்லாம் ஏதோ ஒரு புன்னகையும்.. புத்துணர்வும்..!!

க்யூபிக்கல் டெகரேஷன் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அனைவரும் தாங்கள் ஆண்டு முழுதும் அமர்ந்து வேலை செய்யும் இடத்தை, தங்களுக்கு பிடித்த வகையில் அலங்காரம் செய்து அழகு பார்த்தார்கள். போஸ்ட் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன், வொர்க் ஷாப், வொயின் ஷாப் என்று ஏதோ ஒரு தீம் வைத்துக்கொண்டு, அதற்கு தொடர்புடைய பொருட்களால் தங்கள் இடத்தை அலங்கரித்து வைத்திருந்தனர்..!! ஒரு பையன் தனது இடத்தில் செடி கொடிகள், இழை தழைகள் எல்லாம் போட்டு நிரப்பி.. அவனும் காட்டுவாசி கெட்டப்பில் கறைபிடித்த பற்களோடு வந்து.. கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம் எழுதிக் கொண்டிருந்தான்..!!

கலாச்சார உடைகள் அணிந்து வரும் போட்டியும் இருந்தது. வெவ்வேறு மாநிலத்தில் இருந்து பெங்களூர் வந்து வேலை பார்ப்பவர்கள், இன்று அவரவர் மாநில கலாச்சார உடைகளை அணிந்து வந்து, அலுவலகத்தையே வண்ணமயமாய் மாற்றியிருந்தனர்..!! குஜராத் குர்தாக்கள்.. ராஜஸ்தானி சோளிகள்.. ஆந்திர பஞ்சகட்சைகள்.. கேரளத்து முண்டுகள்..!! தமிழகத்து தாவணி பாவாடைகளையும் ஆங்காங்கே காண முடிந்தது..!!

ஆடிட்டோரியத்தை ஒட்டி இருந்த அந்த ஸ்மோகிங் ஸோனில் அசோக்கும், ஹரியும் புகை வழியும் வாயுடன் நின்றிருந்தார்கள்..!! மேல் பட்டன் நீக்கப்பட்டு, காலர் பின்னுக்கு தள்ளப்பட்ட சட்டையும்.. கொஞ்சம் தொடையும், கொஞ்சம் கால்ச்சட்டையும் தெரியுமாறு ஏற்றிக்கட்டப்பட்ட வேஷ்டியுமாய் நின்றிருந்தார்கள்..!! இப்போதுதான் நடனப்போட்டியில் ‘வேணாம் மச்சான் வேணாம்.. இந்த பொண்ணுக காதலு..!!’ என்று இருவரும் குத்தாட்டம் போட்டு களைத்திருந்தார்கள்..!! ஆடிய களைப்பை புகை போட்டு ஆற்றிக் கொண்டிருந்தார்கள்..!!

“இன்னிக்கும் மீட்டிங்க போட்டு.. கெட்ட ஏழரையை கூட்டுராய்ங்க மாப்ள..!!” என்று அசோக் மதுரை தமிழ் பேசிக்கொண்டிருந்தான்.

“கிளிப்பச்சை கலர் கெடைக்கல மாப்ள.. பஞ்சுமுட்டாய் கலர்தான் கெடைச்சுச்சு..!!” என்று ஹரி அணிந்து வந்திருந்த சட்டை பற்றி அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் அந்த இடத்திற்கு ப்ரியா அவசர நடையில் வந்து சேர்ந்தாள். அவள் முகத்தில் ஒருவித டென்ஷன் தென்பட்டது. அசோக்கும் ஹரியும் அவளை குழப்பமாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவள்..

“ஹேய்.. நேத்ராவை யாராவது பாத்தீங்களா..??” என்று கவலையாய் கேட்டாள்.

“இல்ல ப்ரியா.. நாங்க பாக்கலையே.. என்னாச்சு..??”

“அங்க சிங்கிங் காம்படிஷன் ஸ்டார்ட் ஆயிடுச்சுடா.. இவ பேரை கூப்பிட்டாங்க.. இவளை ஆளை காணோம்..!!”

“ஓ..!!”

“என் பக்கத்துலதான்டா இருந்தா.. திடீர்னு காணாம போய்ட்டா.. எங்க போனான்னு தெரியலை..!!”

“அவ நம்பருக்கு கால் பண்ணி பாத்தியா..??”

“ஹ்ம்ம்.. பண்ணிப்பாத்தேன்.. என்கேஜ்டா இருக்கு.. எடுக்க மாட்டேன்றா..!! அங்க திரும்ப திரும்ப இவளை கூப்பிட்டுட்டு இருக்காங்க.. டிஸ்குவாலிஃபை பண்ணிருவாங்களோன்னு பயமா இருக்கு..!!” ப்ரியா கவலையாக சொல்ல, அசோக் சில வினாடிகள் தன் நெற்றியை தேய்த்தவாறு யோசித்தான். அப்புறம் ஹரியிடம் திரும்பி,

“மாப்ள.. நீ போய் அவனுகளை கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லு..!! அவ இங்கதான் எங்கயாச்சும் இருப்பா.. நானும் ப்ரியாவும் போய் ஆளை இழுத்துட்டு வர்றோம்..!!” என்றான்.

“ஓகே மாப்ள..!!”

என்ற ஹரி உடனே சிகரட்டை காலில் போட்டு நடுக்கிவிட்டு, ஆடிட்டோரியம் நோக்கி அவசரமாய் சென்றான். அசோக் ஏற்றிக்கட்டியிருந்த வேஷ்டியை தளர்த்திவிட்டு, எதிர் திசையில் ப்ரியாவுடன் நேத்ராவை தேடி சென்றான். ஓட்டமும் நடையுமாய் அசோக்கை பின் தொடர்ந்தவாறே ப்ரியா சொன்னாள். “ஆரம்பத்துல இருந்தே அவளுக்கு இதுல இன்ட்ரஸ்ட் இல்ல அசோக்.. அதான் லாஸ்ட் மொமன்ட்ல எஸ்கேப் ஆகிட்டா போல இருக்கு..!!”

“ச்ச.. ச்ச.. அப்படிலாம் இல்ல..!! அதுக்கப்புறம் அவ மனசை மாத்திக்கிட்டா ப்ரியா.. இந்த காம்படிஷன்ல ப்ரைஸ் வின் பண்ணனும்னு ஹண்ட்ரட் பர்சன்ட் ஸ்ட்ராங்கா இருந்தா..!! எனக்கு நல்லா தெரியும்..!!”

“ஹ்ம்ம்..!!”

“அதுசரி.. இந்த கோவிந்த் பயலுக்கு என்னாச்சு.. இன்னும் வரலையா அவன்..??”

“இல்லடா.. இன்னும் வரல.. என்னாச்சுன்னு தெரியல..!!”

அசோக்கும் ப்ரியாவும் சேர்ந்து, வளாகத்துக்குள் ஆங்காங்கே வளர்க்கப்பட்டிருந்த பூங்காக்களில் நேத்ராவை தேடிப்பார்த்தார்கள். அவர்கள் வேலை பார்க்கும் தளத்திற்கு சென்று அவளுடைய இடத்தில் பார்த்தார்கள். லிப்ட் ஏறி மேலே சென்று கேஃப்டீரியாவில் தேடினார்கள். எங்கும் அவள் ஆளைக்காணோம்..!!

தேடிக்களைத்துப்போய் இருவரும் மீண்டும் ஆடிட்டோரியம் நோக்கி சென்றபோதுதான்.. தூரத்தில் பார்க்கிங் ஏரியாவுக்கு அருகில்.. தனியாக நின்றிருந்த நேத்ரா அவர்கள் கண்ணில் பட்டாள். தனது செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் இருவருக்கும் ஒருவித நிம்மதி ஏற்பட, அவசரமாய் அவளை நெருங்கினார்கள்.

“ஹேய் நேத்ரா.. உன்னை எங்கல்லாம் தேடுறது..?? உன் பேரை அங்க திரும்ப திரும்ப அனவுன்ஸ் பண்ணிட்டு இருக்குறாங்க.. நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..??”

அசோக்கின் குரலில் ஒருவித எரிச்சல் தொனித்தது. ஆனால் அதை சட்டை செய்யாமல் ஃபோனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நேத்ரா, ஒருசில வினாடிகளிலேயே

“ஓகே.. ஓகே.. ஓகே.. பை..!!” என்று பேச்சை முடித்து, காலை கட் செய்தாள். அவளுடய முகம் ஒருமாதிரி பொலிவிழந்து போய் வாடியிருந்தது.

“ப்ச்.. கேக்குறேன்ல.. சொல்லு.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?? யார் ஃபோன்ல..??” அசோக் அவளை அவசரப்படுத்தினான்.

“கோ..கோவிந்த்..!!” நேத்ரா உணர்ச்சியே இல்லாத குரலில் சொன்னாள்.

“ஓ..!! என்ன சொல்றான்.. வருவானா வரமாட்டானாமாம்..??”

“வ..வரமாட்டான்.. அவனுக்கு உடம்பு சரியில்ல..!!” நேத்ரா சொல்ல, அசோக்கும் ப்ரியாவும் இப்போது மெலிதாக அதிர்ந்தார்கள்.

“எ..என்னாச்சு..??” ப்ரியாதான் கவலை தோய்ந்த குரலில் கேட்டாள்.

“நேத்து நைட்டுல இருந்து பயங்கர ஃபீவராம்.. ‘இங்க வரணும்னு ஆசையா இருக்கு.. ஆனா எந்திரிக்க கூட முடியலை’ன்னு சொல்றான்..!!”

“ஓ..!!”

கோவிந்த் மீது ஒருவித பச்சாதாபத்துடன் சொன்ன ப்ரியா, ஓரிரு வினாடிகள் அமைதியாக நேத்ராவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் அவசரமாய் சொன்னாள்.

“சரி நேத்ரா.. நீ வா.. அங்க எல்லாம் உனக்காக வெயிட்டிங்..!! டைம் முடியப்போகுது.. கமான்..!!!”

நேத்ரா எதுவும் பேசவில்லை. அவர்கள் முகத்தை ஏறிடுவதை தவிர்த்து வேறெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அமைதி அசோக்கிற்கும், ப்ரியாவிற்கும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது. எதுவும் புரியாதவர்களாய், நேத்ராவின் கலக்கமான முகத்தையே வியப்பும் குழப்பமுமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே..

நேத்ராவின் கண்கள் இரண்டும் பட்டென கலங்கின.. கண்ணீர் துளிகளை கசிய ஆரம்பித்தன..!! முதலில் ஒன்றிரண்டு முத்துக்களாய் உருண்டோடி வந்த துளிகள்.. ஓரிரு வினாடிகளிலேயே பொலபொலவென கொட்ட ஆரம்பித்தன..!! அவளும் உடைந்து போய் உதடுகள் கடித்து விசும்ப ஆரம்பித்தாள்..!! அசோக்கும் ப்ரியாவும் பதறிப் போனார்கள்..!!

“ஹேய்.. நேத்ரா.. எ..என்ன இது..??” அசோக் பதட்டமாய் கேட்டான்.

“அ..அவன் ரூம்ல அவன் ஃப்ரண்ட்ஸ் கூட யா..யாருமே இல்ல அசோக்.. த..தனியா என்ன கஷ்டப்படுறானோ..??”

கலங்கிய கண்களும், விசும்புகிற மூக்கும், துடிக்கிற உதடுகளுமாய் நேத்ரா பரிதாபமாக சொன்னாள். அவள் சொல்லிய விதத்திலேயே அசோக்கிற்கும், ப்ரியாவிற்கும் அதுவரை புரியாமல் இருந்த விஷயம் இப்போது தெளிவாக புரிந்து போனது..!! ஒருவித அதிர்ச்சி தொற்றிக்கொண்டவர்களாய் நேத்ராவின் முகத்தையே இமைக்காமல் பார்த்தார்கள். அசோக்தான் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தக் கேள்வியை கேட்டான்.

“கோ..கோவிந்தை நீ லவ் பண்றியா நேத்ரா..??”

நேத்ரா அந்தக்கேள்விக்கு சில வினாடிகள் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக அழுதுகொண்டிருந்தவள், அப்புறம் படபடத்த தன் உதடுகளை பற்களால் கடித்து அடக்கியவாறு, ‘ஆமாம்..’ என்பதுபோல தனது தலையை மெல்ல அசைத்தாள். அசோக்கும் ப்ரியாவும் இப்போது மெலிதாக முகம் மலர்ந்தார்கள். எந்த மாதிரி ரியாக்ட் செய்வது என்று புரியாமல், சந்தோஷமும், கவலையும் கலந்த மாதிரியாக அவளை ஒரு பார்வை பார்த்தார்கள். இப்போது நேத்ரா பட்டென ப்ரியாவின் கையை பிடித்துக்கொண்டு, சற்றே கெஞ்சலாக சொன்னாள்.

“ப்ரியா.. உன் வண்டியை தர்றியா..?? எனக்கு அவனை உடனே பாக்கணும் போல இருக்கு..!!”

“எ..எடுத்துட்டு போ.. ஆ..ஆனா.. அங்க..” ப்ரியா தடுமாறிக்கொண்டிருக்க, அசோக் சற்று தெளிவான குரலில் நேத்ராவிடம் சொன்னான்.

“ஹேய் நேத்ரா.. இன்னைக்கு காம்படிஷன்ல நீ பாடனும்னு கோவிந்த் ரொம்ப ஆசைப்பட்டான்.. அங்க உன் பேரை..” இப்போது அசோக்கை இடைமறித்து நேத்ரா பட்டென சொன்னாள்.

“ஹையோ.. என்னால இப்போ பாட முடியாது அசோக்.. புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..!!” Mulaigal Kasakkum Tamil New Sex Stories

– தொடரும்