யமுனா தாகம் – 2

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Hot Stories – “வயசுக்கும் லவ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை யமுனா…!! அப்படி என்ன நீ என்னை விட பெரிய வயசானவ..? சும்மா அஞ்சு வயசு அதிகம்..!! டெண்டுல்கர் தெரியுமா..? அவருக்கும், அவர் வொய்ப்புக்கும்..”

“நிறுத்து அசோக்..!! அந்த ஆளு ஒருத்தரு.. வயசுல மூத்த பொண்ணை கல்யாணம் பண்ணாலும் பண்ணினாரு.. ஆளாளுக்கு அவரையே சொல்வீங்க..!!”

“ஏன்..? சொன்னா என்ன தப்பு..? அவங்க கல்யாணம் பண்ணிக்கலையா..? கொழந்தை பெத்துக்கலையா..? சந்தோஷமா வாழலையா..?”

“புரியாம பேசாத அசோக்..!! அவரு ஒன்னும் அஞ்சு வயசு பையனோட, ஒரு விதவை பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலை..”

“யமுனா..!! இதுக்கும் என்னால ஒரு கிரிக்கெட் ப்ளேயரையே உதாரணம் காட்ட முடியும்..!! சும்மா ஏதாவது சொல்லாத..!! இதுலாம் ஊர்ல உலகத்துல நடக்காதது இல்லை யமுனா..!! உனக்குத்தான் ஒத்துக்க மனசு இல்லை..”

“ஆமாம்..!! எனக்குத்தான் மனசு இல்லை..!! போதுமா..?”

சொல்லிவிட்டு யமுனா பட்டென்று அமைதியானாள். ஓரிரு வினாடிகள்.. பின்பு லேசாக தலையை அசைத்தவாறு தொடர்ந்தாள்.

“நீ… நீ… பொறந்ததும் உன்னை இந்தக்கைல தூக்கி கொஞ்சிருக்கேண்டா..!! எத்தனையோ நாளு உன்னை தொட்டில்ல போட்டு ஆட்டி.. தூங்க வச்சிருக்கேன்..!! இப்போ உன்னோட ஜோடி போட்டுக்கிட்டு கல்யாண மேடைல வந்து நிக்க சொல்றியா..? அதுவும் அஞ்சு வயசு புள்ளையோட..”

“நின்னா என்ன தப்பு..? காலம் புல்லா நீ இப்படியே இருக்கப் போறியா..? எதோ உன் கெட்ட நேரம், சின்ன வயசிலேயே புருஷன் உன்னை விட்டு போயிட்டாரு.. அதுக்காக இப்படியே காலத்தை கழிச்சுடலாம்னு பாக்குறியா..? ராகுலை கொஞ்சம் நெனச்சு பாத்தியா..? இங்க பாரு யமுனா..!! நான் உனக்கு நல்ல புருஷனா இருப்பேன்.. உன்னை ராணி மாதிரி பாத்துக்குறேன்.. ராகுலுக்கு அப்பா இல்லைன்ற குறை இருக்காது..!! என்ன சொல்ற..? கொஞ்சம் நிதானமா யோசி யமுனா..!!”

யமுனா கண்களாலேயே எரித்து விடுவது போல, என்னையே சிறிது நேரம் பார்த்தாள். பின்பு தீர்க்கமாக சொன்னாள்.

“இங்க பாரு அசோக்..!! நீ நெனைக்கிறது இந்த ஜென்மத்துல நடக்காது..!! பேசாம இதெல்லாம் மறந்துட்டு அந்த கும்பகோணம் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ..!! அதான் உனக்கு நல்லது..!! அவளை விட நல்ல பொண்ணு உனக்கு கெடைக்க மாட்டா..!!”

அவள் சொன்னதும், நான் அவள் கண்களையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தேன். பின்பு லேசாக தலையை அசைத்து, ஒரு பெருமூச்சு விட்டபடி சோபாவில் இருந்து எழுந்து கொண்டேன். காபி கப்பை டேபிளில் வைத்து விட்டு சொன்னேன்.

“நான் கெளம்புறேன் யமுனா..!!”

அவளும் எழுந்து கொண்டாள்.

“இரு..!! பேசிட்டு இருக்குறப்போ.. இப்படி பாதியில எழுந்து போனா என்ன அர்த்தம்..?” என்றாள்.

“ம்ம்ம்…? உனக்கு பேசி புரிய வைக்க முடியாதுன்னு அர்த்தம்…!!” என்று நான் கோபமாக சொன்னேன்.

“என்ன புரியலை எனக்கு..? சொல்லு அசோக்.. என்ன புரியலை..?” அவளும் கோபமாகவே கேட்டாள்.

“உனக்கு ஒரு மண்ணும் புரியலை..!! நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு புரியலை..!! ராகுல் மேல எவ்வளவு ப்ரியம் வச்சிருக்கேன்னு புரியலை..!! நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா.. நாம எவ்வளவு சந்தோஷமா இருப்போம்னு புரியலை..!!”

“ஓஹோ…!! அப்படி என்ன பொல்லா…த லவ்வு என் மேல..? அப்படி என்ன பெருசா எங்கிட்ட புடிச்சிருக்கு…? கொஞ்சம் வெளக்கமா சொல்றியா..? நானும் தெரிஞ்சுக்குறேன்..!!”

அவள் இப்போது எனது காதலையே கேலி செய்வது போல சொன்னாள். அவளுடைய கிண்டல் வார்த்தைகள் என்னை உஷ்ணமாக்கின. கோபத்தை அடக்கிக்கொண்டு சொன்னேன்.

“வேணாம் யமுனா..!! அப்படிலாம் பேசாத..!!”

“என்ன வேணாம்..? கேக்குறன்ல..? சொல்லு..!!”

“போதும் யமுனா..!! ப்ளீஸ்… வேணாம்..!!”

“லவ் பண்றேன்னு சொல்றேல..? அப்படி என்ன பெருசா என்னை லவ் பண்றேன்னு எனக்கு தெரியனும்.. சொல்லு…!!”

எனக்குள் கோபம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டு இருப்பதை அறியாமல் அவள் என்னை சீண்டினாள். நான் அவள் முகத்தை உற்றுப் பார்த்தபடி சொன்னேன்.

“உனக்கு புரியாது..!!”

“சொல்லு..!! புரிஞ்சிக்கிறேன்..!!” அவள் பிடிவாதமாக பட்டென்று சொன்னாள்.

நான் ஒரு இரண்டு வினாடிகள்தான் யோசித்திருப்பேன். பின்பு யமுனாவை பட்டென்று இழுத்து, அவளுடைய உதடுகளில் என் உதடுகளை பொருத்திக் கொண்டேன். வெறித்தனமாக முத்தமிட்டேன். அவளுடைய கன்னம் இரண்டும் என் கைகளுக்குள். அவளுடைய மாதுளை இதழ்கள் இரண்டும் என் உதடுகளுக்குள்.

யமுனா திணறிப் போனாள். திமிறினாள். என் மார்பில் கைவைத்து, என்னை தள்ளிவிட முயன்றாள். நான் பிடிவாதமாக இருந்தேன். கவ்விய உதடுகளை விடவே இல்லை. சுவைத்துக் கொண்டே இருந்தேன். திமிறிய யமுனாவும் பின் கொஞ்சம் கொஞ்சமாக தன் முயற்சியை கைவிட்டாள். என் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு, நான் முத்தமிட்டு முடிக்கும் வரை அமைதியாக நின்றாள்.

யமுனாவின் திமிறல் நின்ற சில நொடிகளிலேயே நான் அவளுடைய உதடுகளை விடுவித்தேன். இத்தனை நேரம் மூடியிருந்த கண்களை திறந்து அவளை பார்த்தேன். நான் கண்களை திறந்த பிறகுதான், அவளும் இமைகளை பிரித்தாள். அதிர்ச்சியாய், நம்பமுடியாமல் என்னை பார்த்தாள். நான் மெல்லிய குரலில் சொன்னேன்.

“இப்போ புரியுதா…? நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு…?”

அவ்வளவுதான்…!! யமுனாவுக்கு உதடுகள் படபடவென துடிக்க ஆரம்பித்தன. துடித்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். அவளுடைய மூக்கு லேசாக விசும்பியது. அவளுடைய கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் வழிந்து ஓட ஆரம்பித்தது. கண்களில் நீர் தளும்ப கொஞ்ச நேரம் என்னையே பார்த்தவள், பின்பு பளாரென்று என் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். வலியில் சுர்ரென்று எரிந்த கன்னத்தை, நான் ஒரு கையால் பிடித்துக் கொண்டேன். ஓரிரு வினாடிகள் என்னை மேலும், கீழும் பார்த்த யமுனா, பின்னர் அழுதுகொண்டே வீட்டுக்குள் ஓடினாள்.

அவள் உள்ளே செல்லவும், ராகுல் ஹாலுக்குள் நுழையவும் சரியாக இருந்தது. அழுதுகொண்டு ஓடும் அம்மாவையே திரும்பி திரும்பி பார்த்தவாறு என்னிடம் வந்தான். என்னை நிமிர்ந்து பார்த்து குழப்பமான குரலில் கேட்டான்.

“ஏன் அங்கிள் மம்மி அழுதுட்டு போறா..?”

நான் பட்டென்று மண்டியிட்டு அவனை என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

“ஒன்னும் இல்லைடா..!! ஒன்னும் இல்லை..!!”

“மம்மிட்ட பைட் பண்ணாதீங்க அங்கிள்.!! எனக்கு உங்களையும் புடிக்கும்.. மம்மியையும் புடிக்கும்..”

“இல்லைடா..!! பைட் பண்ணலை..!! பைட் பண்ணலை..!!”

சொல்லிவிட்டு நான் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.


அப்புறம் ஒரு வாரம் நான் யமுனாவை பார்க்கவில்லை. அவளுடைய வீட்டுப் பக்கமே செல்லவில்லை. ராகுலுடனும் விளையாடப் போகவில்லை. நான் தவறு செய்துவிட்டேன் என்ற குற்ற உணர்வு மனதுக்குள் இருந்து வருத்தியது. காதலிக்கிற பெண்ணாக இருந்தாலும், அவளுடைய அனுமதி இல்லாமல் முத்தமிடுவது தவறுதானே..? மீண்டும் யமுனாவின் முகத்தில் விழிக்கவே வெக்கமாக இருந்தது.

ஒரு வாரம் கழித்து ஒரு நாள், அம்மாவை கோவிலுக்கு கூட்டி சென்றேன். அம்மா கோவிலுக்குள் செல்ல, நான் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே சென்ற அம்மா சிறிது நேரம் கழித்து, யமுனாவுடன் வெளியே வந்தாள். அவளை பார்த்ததும் எனது இதயத்துடிப்பு சற்று அதிகரித்தது. நான் யமுனாவின் முகத்தை பார்க்காமல் வேறு பக்கமாக பார்வையை திருப்பிக் கொண்டேன். இருவரும் என்னை நெருங்கினார்கள்.

“அக்காட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இரு அசோக்..!! நான் சாமிக்கு போட.. பூ வாங்கிட்டு வந்துர்றேன்…!!”

என்று அம்மா சொல்லிவிட்டு நகர்ந்து பூக்கடை பக்கமாக செல்ல, நானும், யமுனாவும் தனியாக நின்றிருந்தோம். என்னுடைய பார்வை வேறு எங்கோ இருக்க, யமுனாதான் “ம்க்கும்ம்..” என்று செருமி, அவளை பார்க்க வைத்தாள். நான் எதிர்பார்க்காத வகையில் மிகவும் சகஜமாக ஆனால் மெல்லிய குரலில் பேசினாள்.

“ம்ம்ம்…!! உன் அம்மா.. என்னை அக்கான்னு சொல்லிட்டு போறா..!! நீ அடிக்கிற கூத்தெல்லாம் அவகிட்ட சொன்னா.. அவ்வளவுதான்.. அப்படியே பத்ரகாளி மாதிரி ஆடுவா…!!”

நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றேன். யமுனாவே தொடர்ந்து பேசினாள். மெல்லிய குரலில் கேட்டாள்.

“ஏண்டா ஒரு வாரமா வீட்டுக்கு வரலை..?”

“ஒன்னும் இல்லை..!! சும்மாதான்..!!”

“அன்னைக்கு உன்னை நான் அறைஞ்சுட்டேன்னு கோவமா..?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை..!! தப்பு பன்னுனதுக்குத்தான அறைஞ்ச..?”

“ம்ம்ம்…!! தப்புன்னு புரிஞ்சா சரி…!!”

“நான் தப்புன்னு சொன்னது.. உன்னை கிஸ் பண்ணதை.. லவ் பண்ணதை இல்லை..!!”

“அடங்கமாட்டியா நீ..!! ம்ம்.. சரி விடு..!! நான் அதெல்லாம் மறந்துட்டேன்… எப்பவும் போல வீட்டுக்கு வா..!! சரியா..?”

“ம்ம்.. வர்றேன்…!!” நான் அலட்சியமாக சொன்னேன்.

“எப்போ…?”

“வர்றேன்னு சொல்றன்ல..? வர்றேன்..!!” மீண்டும் அலட்சியமான குரல்.

“இன்னைக்கு ஈவினிங் வர்றியா..?”

“சரி.. வர்றேன்..!!”

அவள் இப்போது என் முகத்தை உற்று நோக்கினாள். குரலை தாழ்த்திக் கொண்டு கொஞ்சம் சீரியசான குரலில் சொன்னாள்.

“இங்க பாரு அசோக்..!! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..!! கண்டிப்பா வரணும்..!!”

“இன்னும் என்ன பேசப் போற..? இப்படி பேசி பேசி என் மனசை மாத்திடலாம்னு நெனைக்காத.. நடக்காது..”

“ப்ச்..!! அதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ வீட்டுக்கு வா..!! பேசலாம்..!! வர்றியா..?”

“ம்ம்..!! வர்றேன்..!!”

“சரி சரி…!! உன் அம்மா வர்றா…!! பேச்சை கட் பண்ணிக்கோ..!!”

அம்மா வந்ததும் நான் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். அம்மா பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள். யமுனா அம்மாவுக்கு தெரியாமல் என்னை பார்த்து, வீட்டுக்கு வருமாறு சைகை செய்தாள். நான் லேசாக தலையசைத்துவிட்டு, ஆக்சிலரேட்டரை முறுக்கி பறந்தேன்.


அதன் பிறகும் இரண்டு நாட்கள் நான் யமுனா வீட்டுப் பக்கமே போகவில்லை. என்ன சொல்லப் போகிறாள்..? வளவளவென்று மறுபடியும் ஏதாவது புத்திமதி சொல்வாள்..!!

அப்புறம் ஒரு நாள்.. அன்று விடுமுறை.. நான் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்தேன். அம்மா உப்பு வாங்கி வர சொல்லியிருந்தாள். அடுக்கி வைத்திருந்த பொருட்களில், உப்பு பாக்கெட்டை குனிந்து தேடிக் கொண்டிருந்தேன். திடீரென்று பின்னால் இருந்து குரல் கேட்டது.

“அப்படி குனிஞ்சுக்கிட்டு என்னடா பண்ணிட்டு இருக்குற..?” Yamuna Sunni Oombum Tamil Hot Stories

– தொடரும்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000