இதயப் பூவும் இளமை வண்டும் – 74 tamil kamaveri kathai

tamil kamaveri kathai மிகவும் விரக்தியாக இருந்தான் சசி. இதற்கு முன் அமைதியாய்.. ஆனந்தமாய் போய்க்கொண்டிருந்த அவன் வாழ்வில் விழுந்த முதல் இடி இது.! புவியாழினி மீது அவன் கொண்டிருந்த காதல்.. இந்தளவு அவனை பாதிக்கும் அவன் கொஞ்சம்கூட எதிர் பார்த்திருக்கவில்லை. அவனது வாழ்வில் இது மிகப்பெரிய தோல்வி.! அவமானம்..! அசிங்கம்..! நம்பிக்கை துரோகம்..!

Story : Mukilan

மிகவும் மனமுடைந்துபோன சசி..தனியாக பாருக்குப் போய் பீர் குடித்தான். போதையில்.. தன்னை அவமானப்படுத்தின புவியையும்..நம்பிக்கை துரோகம் செய்த ராமுவையும் கொலை செய்ய வேண்டும் எனக் கொந்தளித்தான்.

அன்றைய இரவுதான்.. முதன் முதலாகக் கண்ணீர்விட்டு அழுதான் சசி. விபரம் தெரிந்த பிறகு அவன் விட்ட முதல் கண்ணீர்..!!

சுய பச்சாதாபம்.. கழிவிரக்கம்.. எல்லாம் அவனை வாட்டியது. புவியாழினி பேசிய பேச்சுக்களும்.. அவளிடம் அவன் பேச முடியாமல் கூணிக்குறுகிப் போய் நின்ற காட்சியும்.. அவன் இதயத்தைக் குத்திக் கிழித்து.. ரணப்படுத்தியது. அந்த அவமானம் தாங்காமல் தொடர்ச்சியாக.. தினமும் பீர் குடித்தான்..!!

சசியின் நட்பு வட்டத்தில் உயிர் நண்பன் என்றில்லாவிட்டாலும்.. மிக நெருக்கமாக இருந்த ராமு இப்போது சசியின் எதிரியாகிவிட்டான். சசியின் இயல்பான பேச்சு மாறியது. வழக்கமான கலகலப்பு.. உற்சாகம் அவனிடம் இல்லை. ஆனாலும் அவனது சோகத்தை அவன் வெளிக்காட்டவே இல்லை..!! அதிகமாக தன் வீட்டுக்குப் போவதையே தவிர்த்தான் சசி. காலையில் கிளம்பி பழக்கடைக்குப் போனால்.. இரவுதான் வீடு திரும்புவான்.! மதிய உணவைக்கூட தவிர்த்து வந்தான்.!

குமுதா காரணம் கேட்டபோதும் அவன் எதுவும் சொல்லவில்லை.!

ராமுவின் கடைப்பக்கம் திரும்புவதுகூட இல்லை. அவனைப் பார்ப்பதும் இல்லை. எதேச்சையாகப் பார்த்தாலும்.. பேசுவதில்லை.! ராமுவும் அவனோடு பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஒருமுறை காத்து கேட்டான். ”என்னடா.. ராமுகூட பேசறதில்லையா..?”

சசி பதில் சொல்லவில்லை.

காத்து ”என்னடா பிரச்சினை..?” என்று கேட்டான்.

”அவனே சொல்லியிருப்பானே..?” என திருப்பிக் கேட்டான் சசி.

”ம்..ம்ம்..! சொன்னான்..!” என்றான் காத்து ”என்னருந்தாலும்.. அந்த மேட்டர்லாம் போயி.. ஒரு புள்ளகிட்ட சொல்லியிருக்கக்கூடாது.! சொல்லிட்டான்.. ஆனா அவ இப்படி மாறுவான்னு.. அவனே எதிர்பாக்லேங்கறான்..”

சசியின் முகம் இருகியது. காத்து ”சரி விடுடா.. நடந்தது நடந்து போச்சு.. அவன நானும் நல்லா திட்டி விட்டேன்.! இப்ப அண்ணாச்சி ஊர்ல இல்ல போலருக்கு.. எப்ப வருவாங்க..?” என்று கேட்டான்.

சசி எதுவும் பேசும் நிலையில் இல்லை..! அதைப் பற்றி அவன் எதுவும்.. யாரோடும் பேசத் தயாராக இல்லை..! அவன் பேசாதது கண்டு காத்துவே பேச்சை மாற்றினான்.! அவனது மணவாழ்க்கை.. உறவினர்கள் பிரச்சினை என எல்லாம் ஒரு பாட்டம் ஒப்பித்தான்.!!

இரவு சசி வேலை முடிந்து வரும்போதே பீர் குடித்துவிட்டுத்தான் வந்தான். வழியில்.. அவனைப் பார்த்த மஞ்சு.. அவனைக் கூப்பிட்டாள். ”ஹலோ.. சசி..”

அவளைப் பார்த்துவிட்டு சைக்கிளை ஓரம்கட்டினான் சசி. ரோடு தாண்டி அவனிடம் வந்தாள் மஞ்சு. ” எப்படி இருக்கீங்க..?”

”ம்..! நீ..?” சுரத்தின்றி கேட்டான்.

”சூப்பரா இருக்கேன்..! ” சைக்கிள் ஹேண்ட் பாரைப் பிடித்தாள் ”அப்றம் பாக்கவே முடியறதில்ல..?”

”வேலை..”

”வேலைக்கு போக ஆரம்பிச்சதுலேர்ந்து பயங்கர பிஸிதான்..?” சிரித்தாள். சுடிதார்தான் போட்டிருந்தாள். ஆனால் மார்பைக் காட்டும்படி நெஞ்சை முன்தள்ளி நின்றிருந்தாள்.

”அப்படினு இல்ல….”

”வீட்டுப்பக்கமெல்லாம் வரதே இல்ல..? ஏன்.. எங்க நாபகமெல்லாம் வராதா உங்களுக்கு..?” என்று கேட்டாள்.

அவளோடு இப்போது ஜாலியாகப் பேசும் மனநிலையில் சசி இல்லை. வெறுமனே சிரித்து வைத்தான்.

மஞ்சு ”மறுபடி எலக்ஷன் வந்தாத்தான் வருவீங்களா..?” என்று கேட்டாள்.

”அப்டி இல்ல..”

அவன் முகத்தை ஆர்வமாகப் பார்த்தாள். ”உங்கள ஒன்னு கேக்கனும்..”

”என்ன..?”

சட்டென.”ட்ரிங்க்ஸ் அடிச்சிருக்கீங்களா..?” எனக் கேட்டாள்.

”ம்…!!” சிரித்தான்.

”ஸ்மெல் வருது..”

”சரி.. நா போகட்டுமா..?”

”உங்க மொபைல் நெம்பர் குடுங்க..” என்றாள்.

”ஏன் உன்கிட்ட இருந்துச்சு இல்ல..?”

”அது என்னோட பழைய சிம்முல இருந்துச்சு.. அது எங்கண்ணா புடுங்கி ஒடச்சுட்டான். இப்ப வேற சிம்..நெம்பர் குடுங்க…”

” எதுக்கு..?”

”பேசறதுக்கு…” குழைந்தாள் ”நா இப்ப ப்ரீ…”

”அப்படியா..? ஏன் இப்ப ஸ்கூல் போறதில்ல..?”

”ஹைய்யோ.. அதில்ல.. இது வேற ப்ரீ…”

”ஓ.. உள்ளார ஒன்னும் போடலியா..?”

”ச்சீ.. ” அவன் கையில் தட்டினாள் ”நெம்பர் குடுங்க சொல்றேன்..”

”போன் இப்ப கொஞ்சம் ரிப்பேர்” என பொய் சொன்னான் சசி ”அப்றம் தரேன்.. சரி நான் போகட்டுமா..?”

சைக்கிளை அழுத்திப் பிடித்தாள். ”வெய்ட்.. நா ஒன்னு கேக்கனும்னு சொன்னேன் இல்ல..”

”அதான் கேட்ட இல்ல..?”

”நா.. என்ன கேட்டேன்..?”

”என் நெம்பர்..?”

”ஆ.. அதில்ல.. வெளையாடாதிங்க சசி..! நா வேற ஒன்னு கேக்கனும்..”

”சரி கேளு.?”

குரலைத் தழைத்து ”அண்ணாச்சி எங்க போனாங்க.. ஊருக்கா.?” என்று கேட்டாள்.

”ஆமா.. ஏன்..?”

” இல்ல.. நா ஒண்ணு கேள்விப்பட்டேன்.. உங்களுக்கும.. நம்ம அண்ணாச்சியம்மாவுக்கும்.. லிங்க்னு…”

அதிர்ந்து விட்டான் சசி. ”ஏய்.. என்ன பேசற..? யாரு.. யாரு சொன்னது இப்படி..?”

”உங்க பிரெண்டு ராமுதான் சொன்னாப்ல..” வாயெல்லாம் பல்லாகச் சிரித்தாள்.

சசியின் கோபம் சிணந்தது. ”ஏய்.. நீ பாட்டுக்கு கண்டவன் சொல்றதெல்லாம் லூசு மாதிரி நம்பிட்டிருக்காத.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..! ஆமா நீ என்ன ஓவரா.. அவன்கூடல்லாம் டேட்டிங் போய்ட்டிருக்கியா..?”

”சொன்னாரா.? லவ் பண்றோம்..?”

”பண்றோமா..?”

”ஆ..!!”

”இன்னுமா..?”

”ஆமா…”

”கிழிஞ்சுது போ.. நீ ஏதோ கை மாறிட்டேனு சொன்னான். அவனும் இப்ப வேற ஒருத்திய லவ் பண்ணிட்டுக்கான்.. அது தெரியாதா உனக்கு..?”

”என்கூடல்லாம் முன்ன மாதிரி இல்ல.. அவரு லவ் பண்றாரா.. யார..?”

”யாரவோ பண்றான்..? அப்றம் உன்ன பத்தி ரொம்ப மோசமா சொல்றான்..? உண்மையா..?”

”என்னை பத்தியா.. என்ன சொன்னாப்ல..?”

”யாரு கூப்ட்டாலும் நீ போயிருவேன்னான். அப்படியா..? பாத்து இரு.. வயிறு வீங்கிரும்..!!” என்றான்.

”ச்சீ.. அநதளவுக்கெல்லாம் இல்ல.. ராமா சொன்னாங்க..?”

”ம்..! உன்கிட்டகூட அவன் காண்டமே யூஸ் பண்லயாமே..? சேப்டி முக்கியம்.. அத மறந்துடாத..! சரி நான் போறேன்..! பை.. டேக் கேர்..!!” என்றுவிட்டு.. உடனே கிளம்பிவிட்டான் சசி.

அவன் மனதின் வன்மம்.. மஞ்சுவோடு பேசியதை எண்ணி ஆனந்தமடைந்தது..!!

சசி காம்பௌண்டுக்குள் நுழைந்தபோது அண்ணாச்சி வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மணி பார்த்தான். பதினொன்று.! சுவர் ஓரமாக சைக்கிளை நிறுத்தினான். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். அண்ணாச்சியம்மா சிரித்தாள். ”எப்ப வந்தீங்க..?” என லேசான வியப்போடு கேட்டான்.

ஜன்னல் பக்கத்தில் வந்தாள். ”சாயந்திரம்.. எப்படி இருக்க பையா..?”

வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் ”ம்..நீங்க..?” என்று கேட்டான்.

”ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா..பையா.?”

”அண்ணாச்சி..?”

”தூங்கிட்டார்..!”

”நீங்க தூங்கல .?”

”உன்ன பாக்கத்தான்….”

”வரேனு போன்கூட பண்ணல..?”

”சர்ப்ரைஸா இருக்கட்டும்னுதான் பண்ல..! ஆமா நீ மட்டும் லேட்டா வர்ற.. உங்க மச்சான் வந்து ஒரு மணிநேரம் ஆகுது..?”

”அவரு பேமிலி மேன்..”

”ஓ.. நீங்க..?”

”பேச்சிலர்.. மேடம் ரெண்டு வாரமா ஊர்ல என்ன பண்ணீங்க..?”

” ஊர் ஊரா சுத்தினேன் பையா.. எல்லா சொந்தக்காரங்க வீட்டுக்கும் போய்ட்டு வந்தோம்.. உன்கிட்ட அதுபத்தி நெறைய பேசனும்.. அப்றம் வரியா..?”

”வந்த அன்னிக்கேவா..?”

”ஏன்டா பையா.. எத்தனை நாள் ஆச்சு..! சரி.. அது இருக்கட்டும்.. உங்கக்காகிட்ட அல்வா குடுத்துருக்கேன்.. சாப்பிட்டு பாரு..”

”திருநெல்வேலி அல்வாவா..?”

”ம்..ம்ம்..! நம்ம காம்போண்ட்ல எல்லாருக்கும் குடுத்தேன்..!!”

”ம்..ம்ம்..!!”

”உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லனும்.. உள்ள வரியா..?”

”இப்ப வேண்டாம்.. என்ன சொல்லுங்க..?”

”சரி.. இப்பவே சொல்லிர்றேன்.! நா அம்மா ஆகப்போறேன்..!!” என்ற அவள் குரலில் பூரிப்பு மிகுந்திருந்தது.

திடுக்கிட்டான் சசி. ”என்னா…. தூ…?”

”ஆமா பையா.. இப்ப நா.. கன்சீவா இருக்கேன்..”

சசியின் காதுகள் அடைத்தன. கண்கள் இருண்டன..! கால்கள் தளர்ந்தது..! குரல் கலங்கியது.! ”இந்த நேரத்துல.. இன்னொரு பிரச்சினையா புதுசா.. கடவுளே..” என முணுமுணுத்தான் சசி….!!!!

-வளரும்….!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 74