இதயப் பூவும் இளமை வண்டும் – 120

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – வாழ்வின் எல்லாக் கால கட்டங்களையும்.. நாம் நினைப்பது போல வாழ்ந்துவிட முடியாது.! அதற்கேற்ற விதமாக நாம்தான் மாறியாக வேண்டியிருக்கிறது.!

சசி.. ராமு.. இருவரின் நட்பு விசயத்திலும்.. நடந்தது அதுதான்..!!

கவி.. புவி.. இருவரையும் அழைத்துப் போய்.. அம்மாவைக் காட்டியபிறகு.. அரை மணிநேரம் கழித்து.. அவள்களைக் கூட்டிப் போய் வீட்டில் விட்டு.. விட்டு.. அவன் மீண்டும்.. குமுதா வீட்டுக்குப் போக… காம்பௌண்டில் நுழையும் முன்பே.. ராமுவின் கடை வாசலில் நின்றிருந்த சம்சு… சசியை அழைத்தான்.! ”நண்பா…வாடா..”

”ம்..ம்ம்..! இரு.. வரேன்.!” பைக்கைக் கொண்டு போய்.. காம்பௌண்டுக்குள் நிறுத்திவிட்டு.. வெளியே வந்தான். முன்னாலேயே நின்றிருந்த சம்சுவிடம் போனான் சசி.!

கடைக்குள் காத்துவும்.. பிரகாஷும் ஏதோ ஒரு விசயத்தை மிகத் தீவிரமாக விவாதித்திக் கொண்டிருக்க… ராமு கட்டிங் டேபிள் முன் நின்றிருந்தான்.!

சசி.. அந்தக் கடை வாசலை மிதித்து வருடத்திற்கு மேல் ஆகியிருந்தது. மீண்டும் இப்போதுதான் வாசல் படியை மிதித்திருக்கிறான். அவன் கடைக்குள் போகவில்லை. கடை முன்பாகவே நின்று பேசினான். சசியைப் பார்த்ததும் காத்துவும்.. பிரகாஷும் எழுந்து வெளியே வந்துவிட்டார்கள்..! சசியைப் பார்த்து ராமு புன்னகைத்தான்.! சசியும் லேசான ஒரு புன்னகை காட்டினான். ! அவன் மனப்பகையை மறந்துவிடவில்லை. என்றாலும்…அதிகமாக அலட்டிக் கொள்ளவும் இல்லை. !!

நண்பர்களுக்கு.. டீ சிகரெட் வாங்கிக் கொடுத்தான் ராமு. சசியும் டீ குடித்தான்.!

டெய்லர் கடையை இப்பொழுது ஓரளவு விரிவு படுத்தியிருந்தான் ராமு. கடைக்கு முன்புறம்.. கிளாஸ்.. போட்டு.. தையல் மிஷின்களை பவர் மிஷினாக மாற்றி.. இரண்டு டெய்லர்களையும் வேலைக்கு வைத்திருந்தான்..!!

இன்று…… ராமுவின் பையனுக்கு பிறந்த நாள்..! அதற்காகத்தான் இப்போது நண்பர்கள் கூட்டம் கூடியிருந்து.! இரவு பார்ட்டிக்கு ஏற்பாடாகியிருந்தது.! அந்தப் பார்ட்டிக்கு.. சசியையும் விடாப்பிடியாக அழைத்துப் போனார்கள்..!!

பார்ட்டியில் வெறுமனே குடித்துவிட்டுப் போக விரும்பாத சசி.. கிப்ட் ஷாப்புக்குப் போய்.. ஒரு கிப்ட் வாங்கி.. அதை ராமுவிடம் கொடுத்தான்.! அதையும் நண்பர்கள் குழந்தையிடம்தான் கொடுக்க வேண்டுமெனச் சொல்ல.. வேறு வழியின்றி.. ராமு வீட்டுக்கும் போனான் சசி.!

ராமுவின் மனைவியைப் பார்த்திருக்கிறான் என்றபோதிலும் அவளுடன் பேசியதில்லை. இப்போதுதான் பேசினான். ! சம்பிரதாயமாக மட்டுமதான் பேசினான். !!

சம்சு.. ராமுவின் மனைவியிடம் சொன்னான். ”உங்க மேரேஜ்க்கு முன்ன..இவங்க ரெண்டு பேரும்.. ரொம்ப க்ளோஸ்.. பிரெண்ட்ஸ்..! ஒரு சின்ன மனச்சங்கடத்துல.. ரெண்டு பேரும் கொஞ்ச நாளா பேசிக்கல..! மறுபடி இப்பதான் பேசிக்கறாங்க..!! எங்க செட்ல நாங்க மூனு பேரும் கல்யாணம் பண்ணி குழந்தைகூட பெத்தாச்சு..! இவன்தான் இன்னும் கல்யாணமே பண்ணிக்காம இருக்கான்.!”

”பொண்ணு பாத்துட்டிருக்கா..?” என ராமு மனைவி கேடக…

”ம்..ம்ம்..! ரொம்ப நாளா.. பாத்துட்டுதான் இருக்காங்க..!!” என்றான்.

சசி மனதுக்குள் நினைத்துக் கொண்டான். ‘எவன்டா சொன்னது..? எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்.! அண்ணாச்சியம்மாவிடம்..!!’ ஆனால் அதை வெளியில் சொல்லத்தான் முடியாது..!!

ராமுவின் வீட்டில் இருந்து கிளம்பி.. சசி வீடு போனபோது இரவு பதினொரு மணி ஆகிவிட்டது.! அவன் பைககை நிறுத்தி.. இறங்கி கதவைத் திறக்க.. கவிதாயினி வீட்டில் இருந்து வெளியே வந்தாள். ”இப்பதான் வரியாடா..?”

”ம்..ம்ம்..!”

”சாப்பிட்டியா..?”

”ம்..ம்ம்..! நீ..?”

”ஓ..!!” அவனிடம் வந்தாள்.

அவன் கதவைத் திறந்து உள்ளே நுழைய.. அவன் பின்னாலேயே வந்தாள் கவி.!

”தூங்கலையா கவி..?”

”தூக்கம் வல்லடா..”

”அதானே.. எப்படி வரும்..?” என புன்னகைத்தவாறு அவன் சட்டைக் கழற்றி..ஹேங்கரில் மாட்டினான்.

”போ..டா…” அவளும் புன்னகைத்தவாறு.. சேரில் உட்கார்ந்தாள்.

”எப்படிரீ பீல் பண்ற..?” அவளைப் பார்த்துக் கொண்டே.. அவன் பேண்ட்டைக் கழற்ற..

உள்ளே வந்தாள் புவியாழினி. ”இங்க என்னடி பண்ற..?” என கவியைக் கேட்டாள்.

”ம்.. பாத்தா எப்படி தெரியுது..?” எனத் திருப்பிக் கேட்டாள் கவி.

சசி அலட்டிக்கொள்ளாமல்.. பேண்ட்டைக் கழற்றி.. லுங்கிக்கு மாறினான்.

”இந்த நேரத்துல.. உனக்கென்ன வேலை.. இங்க..?” சசி பக்கம் பார்க்காமல்.. தன் அக்காளைக் கேட்டாள் புவி.

”நீ ஒருத்தி போதுன்டி..” என்றாள் கவி ”என் பேரு வெளங்கிரும்..!”

”சரி.. நா.. இருக்கவா..? போகவா..?”

”அது உன் இஷ்டம்.. நாங்க ஒன்னும் இங்க கூத்தடிக்க போறதில்ல..”

”சீ.. நான் சொன்னனா.. அப்படி..?”

”நீ கேக்கறது என்னமோ.. அப்படிதான இருக்கு..?”

”சே.. சே.. அப்படி.. இல்ல..” சசியைப் பார்த்தாள் ”எனக்கும் தூக்கம் வரல..! நீங்க ரெண்டு பேரும் ஜாலியா.. பேசி சிரிப்பிங்க..! நான் இருந்தா.. நானும் கொஞ்சம் சிரிப்பேன்.. இல்ல…?”

” அப்ப.. இரு..” கவி சொல்ல..

டிவியைப் போட்டுவிட்டு.. இன்னொரு சேரை எடுத்துப் போட்டு உட்கார்ந்தாள் புவி.

ஓன்றும் சொல்லாமல்.. சசி தண்ணீர் குடுத்துவிட்டு வந்து கட்டிலில் சாய்ந்தான்.

”குடிச்சிருக்கியாடா..?” எனக் கேட்டாள்.

”ம்..ம்ம்..!” சிரித்தான் சசி.

”என்ன பீரா..?” புவி கேட்டாள்.

”ஹாட்…!!”

”ஹாட்ட்ட்டா…?”

”ஏன்..?”

”ஹாட்டுலாம்.. உங்களுக்கு ஒத்துக்காதே..! ரொம்ப ஒளருவீங்களே..? பொய் சொல்லாதிங்க..?”

”அதெல்லாம்.. அப்ப..! இப்ப அப்படி இல்ல..!”

”ஓ..!!” புவியின் வாய்.. ஆச்சரியத்தில் குவிந்தது.

”சாப்பிட கொண்டு வரதாடா.?” என மீண்டும் கேட்டாள் கவி.

”வேனாம்.! நான் சாப்பிட்டேன்.!” என்றான்.

புவி ” என்ன சாப்பிட்டிங்க..?”

அவன் பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனால் உண்மை சொல்வதும் இப்போது உகந்ததல்ல.! எனவே பேச்சை மாற்றினான். ” உங்க மம்மி தூங்கியாச்சா..?”

”ஓ..!!” புவியே பேசினாள்.

”சரக்கா..?” சசி கேட்க…

” ஆமாடா..” எனச் சிரித்தாள் கவி.

புவியைப் பார்த்துக் கேட்டான் சசி. ”கவிக்கு தூக்கம் வரலேன்னா.. அதுக்கு காரணம் இருக்கு..! ஆனா உனக்கு ஏன் தூக்கம்.. வரல..?”

”வரல…” என புவி சொல்ல…

கவி கேட்டாள் ”எனக்கு என்னடா காரணம்..?”

”நீ உன் ஹஸ்கூட.. தூங்கி பழகிட்ட..! இப்ப.. அவரு இல்லாம…” என அவன் புன்னகைக்க…

” அட…ச்சீ..!” என்று சசிரித்தாள் கவி ”உன்னெல்லாம்…..”

”ஆனா.. ஆச்சரியமா இருக்கு கவி.. உன்ன பாத்தா..?”

”என்ன ஆச்சரியம்..?”

”நீயா.. இப்படி எல்லாம்.. வெக்கப்படற..?”

” ஏ… ‘ஷட்’ றா..! நல்லா சொல்லிருவேன்..!” என்றாள்.

”நல்லாதான சொல்ற..? ம்..ம்ம்.. டெல்லு..”

”ஆ…! ஆரம்பிச்சிட்டாங்கய்யா..!!” எனச் சிரித்தாள் புவி..!!

அப்பறம்….. அப்படியே…அவர்கள் பேச்சு.. கவியின் பக்கம் திரும்பியது.! கவியும் அவளது குடும்ப வாழ்க்கை.. அவள் கணவன் உறவினர்கள்.. அவளது தினசரி.. சம்பவங்கள்.. எனச் சொல்லத் தொடங்கினாள்..!!

நள்ளிரவுவரை.. அவர்கள் பேச்சு தொடர்ந்தது. புவியும் அந்த இடத்தைவிட்டுப் போகவே இல்லை. அவள்.. சசியிடம் அதிகம் நெருக்கம் காட்டவே விரும்பினாள். !!

நேரம் நள்ளிரவைக் கடக்க.. சசிக்கு தூக்கம் வரத்தொடங்கியது. ”எனக்கு தூக்கம் வருது.. கவி..” என அவன் சொல்ல..

”மப்பு.. மயக்கமோ..?” எனக் கேட்டாள் புவி.

”அப்படியும் வெச்சிக்கலாம்.!” என்றான்.

புவி.. ”ஹம்ம்.. சரி.. தூக்குங்க..” என எழ… அவளைத் தொடர்ந்து கவியும் எழுந்தாள்.

”ஓகேடா மாமு.. தூங்கு..! மார்னிங் ‘மீட்’ டலாம்..! குட்நைட்..!!”

”ம்..ம்ம்..! மிட்நைட்..!! ஸ்வீட் ட்ரீம்ஸ்ஸ்ஸ்டி..!!” என்றான்.

பெண்கள் இரண்டு பேரும் போனபிறகு.. கதவைச் சாத்திவிட்டு வந்து படுக்கையில் விழுந்த அடுத்த நிமிடம் தூக்கத்தில் ஆழ்ந்தான் சசி…!!

அடுத்த நாள்… காலை..!! குமுதா வீடு. ! அம்மா கட்டில் மீது சாய்வாக உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மடியில் மது உட்கார்ந்திருக்க.. குமுதா கொடுத்த டிபனை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சசி.

”கவி போய்ட்டாளாடா.?” எனக் கேட்டாள் குமுதா.

” இல்ல.. வீட்ல இருக்கா..?”

”எப்ப போறாளாம்..?”

”இன்னிக்கு அவ வீட்டுக்காரன் வந்து கூட்டிட்டு போயிருவான்னு சொல்லிட்டிருந்தா..”

”பரவால்லயாமா..?” என குமுதா கேட்க… சசிக்கு அவள் மீது எரிச்சலாக வந்தது.

”என்ன பரவால்லயாமா..?” என முறைப்பாகக் கேட்டான்.

”அவ.. புருஷன்..? நல்லா பாத்துக்கரானாமாவா..?”

”ஏன்.. நேத்து நீயே.. விசாரிச்சிருப்ப.. இல்ல..?”

சிரித்தாள் ”அதெல்லாம் போய்.. நான் எப்படிடா அவகிட்ட கேக்கறது..? அப்படியே கேட்டாலும.. என்னை பத்தி என்ன நெனைப்பா..?”

”ஆஹா..! நல்லா வாய்ல வந்துரும்..!” என பேச முடியாமல். . எரிச்சலை அடக்கிக் கொண்டு சாப்பிட்டான்.

ஆனால் குமுதா.. அவன் எரிச்சலை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் பேசினாள். ”இல்ல.. நீ அவளோட க்ளோஸ் பிரெண்டு..! ஏதாவது சொல்லிருப்பா இல்ல..? அதான் கேட்டேன்..! எப்படிடா.. அவங்க வீட்டு சைடு எல்லாம் பரவால்லயாமா..?”

” ஏன்.. அத தெரிஞ்சு.. நீ என்ன பண்ணப்போறே..?”

”கேட்டா ஏன்டா.. இப்படி பாயற..? இப்ப நான் என்ன கேட்டுட்டேன் அப்படி..? அவள பத்தி.. தெரிஞ்சுக்கலாம்னுதான்.. சாதாரணமா கேட்டேன்..!” என அவள் அப்பாவியாகப் பேசினாள்.

சசி எரிச்சலை அடக்கிக் கொண்டு அவளைக் கேட்டான். ”உன்ன நான் ஒன்னு கேக்கட்டுமா..?”

”கேளுடா.. என்ன..?”

”நீ லவ் பண்ணியிருக்கியா..?”

”என்ன..?” என திகைப்புடன் கேட்டாள்.

”லவ்..? லவ் பண்ணியிருக்கியானு கேட்டேன்..”

”டேய்.. நான் உன்.. அக்காடா..?”

”ஓ…! அப்படியா..? இவ்ளோ நாள்.. எனக்கு இது தெரியாம போச்சே..! ஏம்மா.. இவதான் எனக்கு அக்காளா..?” என அவன் அம்மாவைப் பார்த்துப் புன்னகையுடன் கேட்டான் சசி..!

அம்மா சிரிக்க…

”ரொம்பத்தான் ஏத்தம்டா.. உனக்கு..” என்றாள் குமுதா.

”ஸோ.. இப்படி வாயானு ஒன்னு இருக்குனு.. வெட்டி நாயம்.. ஊர் வம்புனு எல்லாம் பேச ஆரம்பிச்சா.. கடைசில இப்படிதான் வந்து சேரும்..! புரியுதா..? வாய மூடிட்டு போயி.. ஆகற வேலை என்னமோ.. அதை பாரு..!!” என்றான்.

”ம்.. நா என்ன கேட்டேன்.. நீ எங்க கொண்டு வந்து முடிக்கற..?” என்றாள்.

சசி சாப்பிட்டு.. தோட்டம் கிளம்பினான். அவன் அம்மா.. குழந்தை.. குமுதாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப… அவன் பின்னாலேயே வந்த குமுதா கதவருகே நின்று சொன்னாள். ”மத்யாணம் சாப்பிட வந்தர்றா..”

”ம்..ம்ம்..! வரேன்..!!” என அவன் நடக்க…

”ஒரு நிமிசம் நில்லுடா..” என்றாள் குமுதா.

மாடிப்படியருகே போய் நின்று அவளைப் பார்த்தான். ”என்ன..?”

அவளே வெளியே வந்தாள். அவன் பக்கத்தில் வந்து கேட்டாள். ”ஆமா.. நா லவ் பண்ணியிருக்கனானு.. எதுக்குடா கேட்ட..?” என முகம் நிறையக் குழப்பத்துடன் அவனைக் கேட்டாள்.

குழம்பிய அவள் முகம் பார்த்த சசி.. ”ஹ்ஹாஹாஹா..” என வாய்விட்டுச் சிரித்தான்.

”இப்ப ஏன்டா.. இப்படி சிரிக்கற..?”

”ஏய்.. லூசு..! நா என்ன கேட்டேன்.. நீ என்ன புரிஞ்சுட்ட..?”

”ஏன்டா..? சரி.. சொல்லு..! ஏன் நீ.. அப்படி கேட்ட..?”

இடது கையால் அவள் மண்டையில் தட்டினான் சசி. ”ஏய்… லூசு பக்கி..! சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்..! நீ பாக்கற.. சீரியல்.. டயலாக் மாதிரி.. அதுவும் ஒரு வெட்டி டயலாக்தான்.! அதுக்கு நீ ஏன்.. இவ்ளோ.. குழம்பி தவிக்கற..?”

”குழம்பல…!” என்றாள்.

”சரி.. இப்ப நெஜமாவே.. கேக்கறேன்..! நீ லவ் பண்ணியிருக்கியா.. இல்லையா..?” என ரகசியம் கேட்பது போலக் கேட்டான்.

”நான் உன் அக்காடா..” என மீண்டும் அதே பல்லவியைப் பாடினாள்.

”ஏய்.. அக்கான்னா..? நீயும் ஒரு பொண்ணுதான..? உன்னையும் எவனாவது ஒரு ஹீரோ.. சுத்தி சுத்தி வந்து டூயட் பாடியிருப்பான் இல்ல..?” என்க.. வெட்கப்பட்டுச் சிரித்தாள் குமுதா..!

”ஓ.. ஏதோ ஒன்னு இருக்கு.. போலிருக்கு..?” என அவன் கேட்க…

”போடா.. பேசாம..! மத்யாணம் சாப்பிட வா..! எனக்கு வேலை இருக்கு..! இன்னும் பாத்திரமெல்லாம்.. கழுவாம.. அப்படி அப்படியே கெடக்கு..!!” என திரும்பிப் போனாள்.

”ஓ.. அப்படியா..! இரு.. இரு.. வந்து பாத்துக்கறேன்..!” எனச சிரித்துக் கொண்டே கிளம்பினான் சசி……!!!!!!

-வளரும்…..!!!!!!!

-அன்பு நண்பர்கள் அனைவருக்கும்… என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!! Very Hot Tamil Kamakathaikal

-உங்கள்… முகிலன்……!!!!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000