சாலையோரப் பூக்கள் -1

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Sex Puthagam Padikkum Tamil Kamaveri Kathai – வணக்கம்…தோழர்களே… நான் விழி மலர்..!! படிப்பில் நாட்டமில்லாததாலும்… பெற்றோர்களின் கண்டிப்பு இல்லாததாலும்… பள்ளிப் படிப்புடன். .. கல்விக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டு… ஒரு நூல் மில்லில்போய் வேலைக்குச் சேர்ந்து… இன்றுவரை போய்க்கொண்டிருக்கிறேன்.!!

இந்தக்கதை என்னைப் பற்றியதல்ல…! இருப்பினும் இந்தக்கதையில் நானும் உண்டு.! எனவே… என் பாகத்தை… நானும்.. அவ்வப்போது உங்களுக்குச் சொல்லி வரலாமென்றிருக்கிறேன். !!

நான் ஒரு நல்ல… கதை சொல்லியல்ல… என்பதால்தான் எனது பகுதியை மட்டும். .சொல்லும் பொருப்பை நான் ஏற்றிருக்கிறேன்..!! நான் சொல்வது அல்லாமல். .. இக்கதையின் பொருப்பாளராகிய… முகிலனும் என்னைப்பற்றி. .. கதையின் ஊடாகச் சொல்லி வரக்கூடும்.!!

ஏனெனில் அது.. ஒரு ‘கதை சொல்லி’ யின் பொருப்பு.!!

விடுமுறை நாள்.. என்றாலும் ஓய்வில்லை. வாரம் முழுவதும் மில்லில் வேலை..! இப்போது.. வீட்டில் வேலை செய்வது மிகவும் அலுப்பாக இருந்தது.எனக்கு. .! ‘ச்சை ‘என்று வெறுப்புத் தட்டியது.! அம்மா… அப்பா.. உடைகள் உட்பட… அடங்கமாட்டாமல் அவர்கள் பெத்துப் போட்ட.. என் இரண்டு தம்பிகள்… ஒரு தங்கையின் உடைகள் எல்லாம் இப்போது.. நான்தான் துவைத்தாக வேண்டும். !! நிறைய துணிகள் இருந்ததால் கை வலியே எடுத்து விட்டது.! சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு.. ஒரு வழியாக துவைத்து.. அலசி.. துணிகளை காயப் போடுவதற்காக.. மாடிக்கு எடுத்துப் போனேன். !!

மாடியில் சின்னதாக ஒரு ரூம்.. அதை வாடைகைக்கு விட்டிருந்தோம்.! அதில் தங்கியிருப்பவன்… துகிலன்..!!

என் அப்பாவுக்கு வேண்டியவன்.. இந்த ஊரில் வேலை கிடைத்து. ..வந்து இங்கேயே தங்கி இருந்தான்..! இப்போது …அந்த மாடி ரூம் திறந்திருந்தது. பக்கெட்டிலிருந்த துணிகளை உலரப் போட்டு. .. திரும்பிய போது… அறைக்குள் அவனது முதுகு தெரிந்தது. !!

” அலோ…” என்றேன். என் பக்கம் திரும்பினான். அவன் கையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது.

புன்னகைத்து.. ” விழி மலரா.. வாங்க..” என்றான்.

” லீவா.. இன்னிக்கு. .?”

” ஆமாங்க… நீங்க. ?”

” லீவ்தான்..!! ” எனக்கு வெள்ளிக்கிழமைதான் வார விடுமுறை.! அன்றுதான் கம்பெனியில் சிப்ட் மாறும்.!!

” சாப்டாச்சா..?” அவன் கேட்டான்.

”ம்..ம்ம்..! நீங்க. .?”

” ஓ..!! சாப்பிட்டேன்..!!” எனப் புன்னகைத்தான்.

என்னைப் பொருத்தவரை.. இவன் கொஞ்சம் டீசண்டான பேர்வழி..! அனாவசியமாக அரட்டையடிப்பதோ.. வீண்வாதங்களில் ஈடுபடுவதோ இல்லை.! முக்கியமாகப் பெண்களைக்கண்டால் வழியும் பழக்கம் சுத்தமாகவே இல்லை..!! பார்க்கும் போது.. ஒரு ‘ஹாய் ‘ அல்லது.. ஒரு ‘ஹலோ.’ அவ்வளவுதான்..!! அதனால் அவனை எனக்கு மிகவும் பிடிக்கும்..!! அண்மைக்காலமாக அவனைக் காதலிக்கலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்…!! எனக்கு இந்தக் காதல் மீதெல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றாலும்.. அது இல்லையென்றும் சொல்லிவிட முடியாது…!!

”அப்பறம்…?” என்றேன்.

”சொல்லுங்க..” என்றான் துகிலன்.

” புக்ஸ்லாம் நெறைய படிப்பிங்களா…?”

” ம்…ம்ம்..!!”

” என்ன புக்.. இது…?” அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துக் கேட்டேன்.

” வெற்றுப்படகு..!!” என்றான்.

”கதையா..?”

” நோ… நோ…! ஓஷோவோட புக்ஸ்…!!”

”ஓஷோவா… யாரு அது..?” என நான் கேட்க…

அட்டைப்படத்தைக் காட்டினான். நீண்ட தாடியும்.. தலையில்… கம்பளி குல்லாயுமாக… ஒரு ஆள்..!!

”யாரு. .இது..?” எனக் கேட்டேன்.

”ஓஷோ..!!” என்றான் மறுபடி.

”விஞ்ஞானி மாதிரி இருக்காரு..?”

” விஞ்ஞானி இல்ல.. மெஞ்ஞானி..!” எனப் புன்னகைத்தான் ”இதெல்லாம் அவரோட சொற்பொலிவு..!!”

”ஓ..!! இவ்ளோ பெரிய புக்கா…? எப்படி இதெல்லாம் படிக்கறீங்க..?”

”ஏன். .நீங்க படிக்க மாட்டிங்களா…?”

”படிக்கறதா..?” சிரித்தேன் ”புக்க கைல எடுத்தாலே… நமக்கெல்லாம்.. தூக்கம் பிச்சுகிட்டு வந்துரும். ..”

”ஓ… அப்ப உங்களுக்கு தூக்க மாத்திரையே தேவைப்படாது..?” எனச் சிரித்தான். அவன் சிரிப்பை.. நான் விரும்பி ரசித்தேன்.

”இவ்ளோ.. பெரிய புக்கை எப்படி.. ஒரே நாள்ள படிச்சிருவீங்களா..?” எனக் கேட்டுக்கொண்டே.. அவனது அறைக்குள் நுழைந்தேன்.

”உக்காருங்க..” எனச் சேரை நகர்த்திப் போட்டான் ”ஒரே நாள்ள படிக்க.. இது நாவல் இல்லீங்க..! ஆன்மீகம்.. சார்ந்த விசயம்..! பொருமையாதான் படிக்கனும்..!!”

நான் சேரில் உட்காரவில்லை. ஜன்னல் ஓரமாக.. அவனது புத்தக செல்ஃப் இருந்தது. அதன் பக்கத்தில் போய்.. மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தேன். எல்லாம் பெரிய.. பெரிய புத்தகங்களாக இருந்தன..!! அவைகளில்.. மேலே இருந்த சில புத்தகங்களை எடுத்துப பார்த்தேன்.! அதில்.. கதை புத்தகங்கள் ஒன்றைக்கூடக் காணோம்..! அதிகமாக.. அந்த தாடிக்காரக் கிழவனின் புத்தகங்களாகவே இருந்தன.! ‘ஓஷோ… ஓஷோ..’ என்றிருந்தது. இதெல்லாம் நமக்கு ஒத்து வராதவை..! எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அவனைக் கேட்டேன்.! ”கதை புக்கெல்லாம் படிக்க மாட்டிங்களா..?”

”படிப்பேன்..!!” என்றான் ”ஆனா.. அதிகமா இருக்காது..!!”

”ஒன்னுமே இல்ல..! நீங்க இந்தாளோட.. ஃபேனா..?”

சிரித்தான் ”ஃபேன்லாம் இல்லிங்க…! அந்தாள புடிக்கும்..!!”

”ஓ..!! அப்படி என்ன பண்ணிருக்கான்.. இந்த ஆளு..?”

”அதெல்லாம்.. சொன்னா.. உங்களுக்கு புரியாது…! விடுங்க.. கதை புக் வேனுமா..?” எனக் கேட்டான்.

”என்ன புக் இருக்கு..? இந்த ராஜேஷ்குமார்.. கதை இருக்கா..?” என நான் கேட்க… அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

”அதெல்லாம் இல்லிங்க…”

” அதுக்கு ஏன்.. இப்படி சிரிக்கறீங்க..?” எனக் கேட்டேன்.

”இல்ல.. ராஜேஷ்குமார் நாவல் கேட்டிங்களா.. அதான்..! உங்களுக்கு க்ரைம் ஸ்டைல்தான் புடிக்குமா..?”

”ஏன்.. க்ரைம் கதை.. சூப்பராத்தான இருக்கும்..? அதும் ராஜேஷ்குமார் கதைகள்.. டீ வில கூட சீரியலா வருதே.. நான் அதெல்லாம் பாப்பேன்..!!”

” அய்யோ.. நான் தப்பா சொல்லலீங்க..!” அவன் விவாதம் பண்ணத் தயாரில்லாதவன் போலச் சொன்னான் ”அந்த ரகமான கதைகள்.. என்கிட்ட இல்ல..”

”வாங்கி வெக்கலாமில்ல..! சரி.. வேற எந்த ரகமான கதை இருக்கு..?”

”அதெல்லாம் நீங்க படிக்க மாட்டிங்கனு நெனைக்கறேன்..” என்று புத்தக செல்ப் பக்கத்தில் வந்தான்.

”ஏன்.. என்ன மாதிரி கதை..?”

”சமூக நாவல்..!!” என்று அவன் செல்ப்பின் அடியிலிருந்து சில புத்தகங்களை உருவ.. இரண்டு புத்தகங்கள் தவறிக் கீழே விழுந்தன ”தி ஜா.. பிரபஞ்சன்.. வேணுகோபால்.. அசோகமித்ரன்.. எண்டமூரி.. ராகுல் ஜி…..” என எனக்கு அறிமுகமே இல்லாத பெயர்களை அவன் சொல்லிக்கொண்டே போக….

நான் குனிந்து கீழே விழுந்த.. இரண்டு புத்தகங்களையும் எடுத்தேன்..!! அதில் ஒன்று….. ‘காம சூத்ரா..!!’ Tamil Sex Books Tamil Kamaveri

-மலரும்…..!!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000